இளைய சூரியனே....

உன் கண்ணீரைத் துடைப்பதற்கு
கரங்களை தேடாதே !
உன்னுள் கனலை மூட்டினால்
உனக்கு முளைத்திடும்

ஆயிரம் கரங்கள் !
உன் கவலைகளைச்
சிந்தனை நெருப்பினால் சுட்டெறி !

நீ வாழப் பிறந்தவன்
வீழ்வதற்கல்ல...

உன் சூரிய விழிகளை திற
இருட்டுக் கூட்டத்தினை
இடம் தெரியாமல் எரித்திடு !

நண்பா..
நினைவில் வை
இளைய சூரியனே நீதான்

கனவு என்பது
காலை வரை
ஆனால் உன் நினைவு
கல்லறை வரை

நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே !
காயம்பட்ட மனதை நேசி
நேசித்த மனதை காயப்படுத்தாதே

என் உயிர் தோழி !
பூவை விட்டு பிரியாத ஒளி போல
என் மனதை விட்டு பிரியாத

உன் நினைவு என்றுமே வேணும்.

ஜாக்குலின் மேரி