ஏழையின் இரக்கம் - (சிறுகதை)


சுப்பையா ஒரு கூலித் தொழிலாளி. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் வயிற்றுக்கு உணவு. அவருக்கு ஐந்து பெண்கள். சுப்பையா கஷ்டப்பட்டு தன் ஐந்து மகள்களையும் படிக்க வைத்தார். ஒரு நாள் சுப்பையா தன் மகள்களை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியூருக்குக் கூலித் தொழில் செய்ய சென்றார். அவர் மனைவி மகள்களை சித்தாள் வேலைக்குச் சென்று உணவும், பாடப் புத்தகமும் வாங்கிக் கொடுத்து வளர்த்து வந்தார். வெளியூருக்குச் சென்ற சுப்பையா அங்கு சுனாமியால் தன் தாய், தந்தையை இழந்து ஒரு பெண்ணை வீட்டிற்கு கொண்டு வந்தார். சுப்பையா வீட்டில் கஷ்டம் இருந்தும் அந்தப் பெண்ணையும் தம் வீட்டில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். சுப்பையா தன் ஐந்து மகள்களைப் போல அந்தப் பெண்ணையும் படிக்க வைத்தார். சுப்பையா கூலி வேலை செய்துக் கஷ்டப்பட்டாலும் அந்த பெண்ணையும் தம் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட மனதிருப்தி அவரிடம் இருந்து, அந்த ஆறு பெண்களும் நன்றாகப் படித்து சுப்பையாவை ராஜா போல் ஆக்கினர்.

ஒரு மனிதன் சிறிய வயதில் எவ்வளவு கஷ்டப்படுகிறானோ பெரிய வயதில் அவ்வளவு மகிழ்ச்சியடைவான். கஷ்டப்பட்டால் மட்டும் போதாது ஒரு மனிதரிடம் இரக்கமும் இருக்க வேண்டும்.

- S. SHEEBA, JKM - 1024