அ, ஆ என்றே என்றே சொல்லி
அன்பு மொழி கற்றிடுவோம்
இ, ஈ என்றே சொல்லி
ஈகைத்திறனை வளர்த்திடுவோம் !
உ, ஊ என்றே சொல்லி
ஊக்கம் தன்னை பெருக்கிடுவோம் !
எ, ஏ என்றே சொல்லி
ஏற்றம் கொண்டு வாழ்ந்திடுவோம் !
ஐ சொல்லி என்றே சொல்லி
ஐயம் தன்னை விரட்டிடுவோம்
ஒ, ஓ என்றே சொல்லி
ஒற்றுமையை உணர்த்திடுவோம் !
ஒள என்றே சொல்லி
ஒளவை வாக்கை காத்திடுவோம் !
ஃ என்றே சொல்லி
எஃகு மனிதராய் வாழ்ந்திடுவோம் !
A. நோயல் மேரி
St. ஜான் பிரிட்டோ ஹாஸ்டல்.
புள்ளம்பாடி, VDV - 1080