விலைவாசி உயர்வு... விரக்தியில் மக்கள்...

அண்மைக் காலமாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. இதனால் பாதிக்கப்படுவது கிராமப்புற ஏழை தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் தான். இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்ன?
1)வேளாண்மைத்துறை வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதமாக உள்ளது என மத்திய அரசின் புள்ளி விபரமே இதற்கு சான்றாக உள்ளது. 
2) விவசாய இடு பொருட்களின் விலை உயர்வால் விவசாயிகளின் வாழ்வில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி விவசாயத் தொழிலை கைவிடும் சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 
3) குறைந்த அளவிலான பொருட்களே ரே­ன் கடைகளுக்கு பெயரளவில் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் ரே­ன் கடைகளுக்கு சென்று வாங்கினால்தான் கிடைக்கும் நிலை உள்ளது. 
4) அத்தியாவசியப் பொருட்களின் ஆன்-லைன் வர்த்தகம் அமுலாக்கம். 
5) பதுக்கல் முறையினை கையாளும் வணிகர்கள். 
இவற்றினை களைய மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். இல்லையேல் ஏற்கெனவே அரை வயிற்று பட்டினியோடு அல்லல்படும் மக்கள் அழிந்து போய்விடும் சூழல் ஏற்படும். அழிவின் ஆபத்தில் உள்ள அம்மக்களின் கோபம் வாக்குச் சீட்டில் பிரதிபலிக்கும் நிலை ஏற்படலாம் என்பதையும் அரசுகள் மனதில் கொள்ள வேண்டும். 

- ‘அம்மு'