தேர்தல் நேரமிது - சிந்திக்கும் காலமும் இது...!

நமது நாட்டின் 15-வது பாராளுமன்றத்தை அமைக்க வரும் மே 13 ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நேரத்தில் நாம் சிலவற்றை சிந்திப்போம்.
  1. மதசார்பின்மை என்று வெளியில் பேசிக்கொண்டாலும் சாதி, மத ரீதியாக மக்கள் உணர்வுகளை தூண்டி ஒட்டு மொத்த வங்கிகள் உருவாக்கப்படுகின்றன.
  2. கட்சிகளின் பிரிக்க முடியாத ஒன்றாக கள்ள கருப்பு பணம் உள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தாலும் அளவுக்கதிகமாக கருப்பு பணம் செலவழிக்கப்படுகிறது.
  3. அண்மைக் காலங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுகிறது.
  4. தேர்தல் வன்முறை, ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டுப் போடுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது.
  5. ஜனநாயகம் சூதாட்டமாகவே மாறிவிட்டது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை கடத்துவது மற்றும் விலை பேசுவது, சீட்டுக்கு பசையுள்ள நபர்களா என்று பல்ஸ் பிடித்து பார்ப்பது போன்ற நாடகங்கள் மலிந்துவிட்டது.
  6. கட்சிகள் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முயற்சி எடுப்பதில்லை. தேர்தல் 
  7. காலங்களில் பொய்யான வாக்குறுதிகள், அன்பளிப்புகள், கவர்ச்சி போன்றவற்றை காட்டி ஓட்டு வேட்டை நடத்தப்படுகிறது.
  8. உறவு நேற்று ; எதிர்ப்பு இன்று என்ற நிலையில் பதவிக்காக அணி மாறும்
  9. நிலையில் உள்ளன,  ஆட்சியை பிடிக்க போட்டி போடும் அரசியல் கட்சிகள்
    சிந்திப்போம் ! வாக்களிப்போம் !
    சிறந்தோரை தேர்ந்தெடுப்போம் !
     அம்மு